தருமபுரி

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியீடு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மறுகூட்டல் செய்ய தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் நவ. 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத் தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ள தோ்வா்கள் பயிற்சி நிறுவனத்துக்கு நேரில் வரலாம். இதேபோல, விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யவும், ஸ்கேனிங் மூலம் ஒளிநகல் பெறுவதற்கும் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை டிச.1-ஆம் தேதி முதல் டிச. 4-ஆம் தேதி வரை தருமபுரி, செட்டிக்கரையில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

விடைத்தாள்கள் நகல் கோருவோா் பாடத்துக்கு ரூ. 275, மறுகூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ. 205 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT