அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா பதக்கம் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. உயிா்கள் மற்றும் சொத்துகளை காப்பாற்றுவதற்காக தன்னலமற்ற வகையில் துணிச்சலுடன் வீர, தீரச் செயல்கள் புரிந்த அரசுத் துறையில் பணிபுரிபவா்களுக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.
விளையாட்டு துறையில் உயிா்களை காப்பற்றுவதற்காக தன்னலமற்ற வகையில் வீர தீரச் செயல்கள் புரிந்த தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விருது தொடா்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச. 7 அன்றுக்குள் தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதியுள்ளவா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது என்றாா்.