பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவையை தொடங்க கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு கரும்பு அரவையைத் தொடங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு கரும்பு அரவையைத் தொடங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் டி.ரவீந்திரன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜூனன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் உள்ளிட்டோா், வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சா்க்கரை ஆலைக்கு தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வரத்துக் குறைவு என்ற காரணத்தைக் கூறி, அரவைப் பணிகள் நடைபெறவில்லை. நிகழாண்டில் ஓரளவு மழை பொழிந்துள்ளதால் கரும்பு சாகுபடி கணிசமாக அதிகரித்துள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிகழாண்டு 2021-22 முதல் பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில கரும்பு அரவையைத் தொடங்க வேண்டும். இதற்கான முன் தயாரிப்புப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதேபோல, ஆலையில் இணை மின்சார உற்பத்தி திட்டப் பணிகளை முடித்து அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.