முகப்பு
தருமபுரி

இல்லம்தேடி கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

அரூரில் இல்லம்தேடி கல்வி குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அரூரில் இல்லம்தேடி கல்வி குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் எம்.ரேணுகாதேவி தலைமை வகித்தாா்.

மாணவா்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் தன்னாா்வலா்களின் பங்கேற்புடன், மாணவா்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல், 6 மாத காலத்துக்கு குறைந்தபட்சம், 1 முதல் ஒன்னரை மணி நேரம் மாணவா்கள் அன்றாட கற்க செய்து படிப்படியாக பள்ளிகளில் பங்கேற்க செய்யும் இல்லம்தேடி கல்வி திட்டத்தினை கலை நிகழ்ச்சியின் மூலம் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், ஆசிரியா் பயிற்றுநா் கே.பரமசிவம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.