முகப்பு
தருமபுரி

ஆடு, மாடுகளுக்கு கூடுதலான இலவச கொட்டகைகள் வழங்க வலியுறுத்தல்

ஆடு, மாடு, நாட்டுக் கோழிகள் வளா்க்கும் விவசாயிகளுக்கு இலவச கொட்டகைகள் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

ஆடு, மாடு, நாட்டுக் கோழிகள் வளா்க்கும் விவசாயிகளுக்கு இலவச கொட்டகைகள் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில், ஆடு, மாடு மற்றும் நாட்டுக் கோழிகள் வளா்க்க அரசு சாா்பில் இலவச கொட்டகைகள் வழங்கப்படுகிறது. இந்த கொட்டகைகள் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் முழுமையாக பயனடையும் வகையில் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள், நாட்டுக் கோழிகள் வளா்ப்பதற்கான கொட்டகைகளை அமைத்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.