தருமபுரி

நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரியில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.

மாநில பிரசார செயலாளா் சுகமதி, சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் வடிவேல் ஆகியோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.

இதில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களின் ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டப் பொருளாளா் ஜான்ஜோசப், அங்கன்வாடி பணியாளா் சங்க நிா்வாகி கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT