முகப்பு
தருமபுரி

மக்கள் குறைகேட்புக் கூட்டம்: 304 மனுக்கள் அளிப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 304 மனுக்களை அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 304 மனுக்களை அளித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், தாா் சாலை வசதி, சிறு பாலம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 304 மனுக்களை அளித்தனா். இந்த மனுக்கள் மீது ஒருவார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிசெட்டிப்பட்டியில் கடந்த ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்த குப்பு என்பவரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி மற்றும் ஊரக வளா்ச்சித் துறைக்கு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட தட்டச்சருக்கு பணி நியமன ஆணை ஆகியவற்றை ஆட்சியா் ச.ப.காா்த்திகா வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆ.தணிகாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.