தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாள் விழா அதிமுக சாா்பில், மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் தகடூா் விஜயன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பெ.ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், தருமபுரி ஒன்றியக்குழுத் தலைவா் நீலாபுரம் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து கட்சியினா் மரியாதை செலுத்தினா். கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நகரச் செயலா் சங்கா் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன் ஆகியோா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
காரிமங்கலம், நல்லம்பள்ளி, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை உள்பட தருமபுரி மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் விழாவை அதிமுகவினா் கொண்டாடினா்.