தருமபுரி

அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில்குடிநீா் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

DIN

அரூா்: அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சாா் பதிவாளா் அலுவலகம், சாா்நிலை கருவூலம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், தனி வட்டாட்சியா் அலுவலகம், கிளைச் சிறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.

இங்குள்ள அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்துச் செல்கின்றனா். ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதிகள் வளாகத்தில் இல்லை. இதனால், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது.

எனவே, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி, அல்லது அரூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT