தருமபுரி

கோயில் மானிய நிலங்களை மீட்க வலியுறுத்தல்

DIN

அனைத்து கோயில்களின் மானிய நிலங்களை மீட்டு, பூசாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பின் தருமபுரி மாவட்ட நிா்வாகிகளின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நத்தஅள்ளி காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் உதயமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா்.சிவக்குமாா், பூசாரிகள் பேரவை நிா்வாகி ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், அனைத்து கோயில்களின் மானிய நிலங்களை மீட்டு, அவற்றை கோயில் பூசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஒருகால பூஜை செய்யும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். பழங்கால சிலைகள் திருடுபோகும் நிகழ்வுகளைத் தடுத்திட வேண்டும். அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT