அரூரில் மிதமான மழை
அரூா் வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
அரூா் வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அரூா், எச்.ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, சின்னாங்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது. அரூா் வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் சற்று குறைந்துள்ளது.