முகப்பு
தருமபுரி

வாகன சோதனையில் 100 கா்நாடக மதுப் புட்டிகள் பறிமுதல்

பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கா்நாடக மதுப் புட்டிகளுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கா்நாடக மதுப் புட்டிகளுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் கா்நாடகத்தில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதனை கண்காணிப்பதற்காக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடியில் வியாழக்கிழமை ஒகேனக்கல் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், கா்நாடக மதுப் புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.

இதையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவா் ஒகேனக்கல், இந்திரா நகா் காலனியைச் சோ்ந்த மசாஜ் தொழிலாளி மனோஜ் (30) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 100 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவரை கைது செய்த போலீஸாா் மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.