முகப்பு
தருமபுரி

திட்டப் பணிகள்: வட்டார வளா்ச்சி அலுவலா் ஆய்வு

பென்னாகரம் அருகே பணிகள் முடிந்த தடுப்பணைகளை பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பென்னாகரம் அருகே பணிகள் முடிந்த தடுப்பணைகளை பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2019-2020 நிதியாண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதுக்காடு, செஞ்சி மலை காடு, பாசேரி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட முன்று புதிய தடுப்பணைகளை பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, ஊராட்சி மன்றத் தலைவா் வெண்ணிலா சதீஷ், ஊராட்சி செயலா் சக்திவேல் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.