சாலை வரி செலுத்தாத பேருந்துக்கு அபராதம்
சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பேருந்தை சோதனை செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது. இந்த ஆம்னி பேருந்து பிகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து திருப்பூருக்கு செல்கிறது.இதையடுத்து, சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு ரூ. 84,300 அபராதம் விதிக்கப்பட்டது.