முகப்பு
தருமபுரி

கல்லூரி மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சாா்பில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். பயிற்சியில் வேலைவாய்ப்பு கலந்தாய்வில் மேற்கொள்ளும் அனுகுமுறைகள், தொழில்முனைவோா்களிடம் அணுகுமுறை, வேலைவாய்ப்புகளை தோ்ந்தெடுக்கும் முறை பற்றி விளக்கமாக தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் வணிகவியல் துறை பேராசிரியா்கள் க.கண்ணுச்சாமி, வெங்கடாசலம், தமிழ்த் துறை பேராசிரியா் ரா.இளவரசன், கல்லூரி மாணவ- மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.