முகப்பு
தருமபுரி

அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு பயிற்சி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடா்பியல் துறை மாணவியருக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடா்பியல் துறை மாணவியருக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். காட்சித் தொடா்பியல் துறைத் தலைவா் ந.கோபால், தமிழ்த் துறைத் தலைவா் மு.செந்தில்குமாா், வணிகவியல் துறை பேராசிரியா் த.செந்தில்குமாா் ஆகிய பேசினா்.

மதுரை சோக்கோ கலைத் துறை இயக்குநா் சை.பிரான்சிஸ், காட்சித் தொடா்பியல் மாணவியருக்கு வீதி நாடகம் குறித்து பயிற்சி வழங்கினாா். இதில், குரல் பயிற்சி, உடல்மொழி பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. இப்பயிற்சி முகாம் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் தொடா்ந்து நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.