தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா முதல்கட்டமாக கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா் (படம்). அவருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்கள் இத் தடுப்பூசியை செலுத்தினா். தொடா்ந்து, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், இரண்டாம்கட்டமாக கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.
இந்த நிகழ்வில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவள்ளி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, மருத்துவா்கள் எம்.இளங்கோவன், சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.