ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.3.89 லட்சம் பறிமுதல்
இரண்டு வியாபாரிகளிடம் இருந்து ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
இரண்டு வியாபாரிகளிடம் இருந்து ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் குலோத்துங்கன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் தருமபுரி மாவட்டம், தொப்பூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரியை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்திச் சோதனை மேற்கொண்டனா். அந்த லாரியில் வந்த சேலம் மாவட்டம், ஓமலூா் எம்.செட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாட்டு வியாபாரி பழனிசாமி (62) என்பவரிடம் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது.
இதேபோல, அடுத்து வந்த ஒரு லாரியை நிறுத்தி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் அந்த லாரியில் வந்த சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே எம்.செட்டிப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் (57) என்ற மாட்டு வியாபாரியிடமிருந்து ஆவணங்களின்றி ரூ. 1. 48 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது. இரண்டு மாட்டு வியாபாரிகளிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ. 3.89 லட்சம் ரொக்கத்தை தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாப் மற்றும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அலுவலா்கள், மாட்டு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த, ரொக்கப் பணத்தை, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். மேலும், இந்த தொகைக்கான உரிய சான்றுகள் அல்லது ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டப்பின்பு மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.