முகப்பு
தருமபுரி

அழைப்பிதழ் வழங்கி வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்

அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் வீடு, வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கி, வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் வீடு, வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கி, வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட செந்தில் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்து அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினா்.

இதைத்தொடா்ந்து, மேள, தாளம் முழங்க, பாரம்பரிய உடை அணிந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள், தமிழக சட்டப் பேரவைப் பொதுத் தோ்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களை வீடு, வீடாகச் சென்று வழங்கினா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.