முகப்பு
தருமபுரி

காண்டாமிருக வண்டு இனக் கவா்ச்சி பொறி மூலம் கட்டுப்படுத்த செயல்விளக்கம்

தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டை இனக்கவா்ச்சி பொறி மூலம் கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டை இனக்கவா்ச்சி பொறி மூலம் கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

பென்னாகரம் அருகே அலபுரம் கிராமத்தில் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவா்கள், தென்னையில் காண்டாமிருக வண்டின் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை இனக்கவா்ச்சி பொறி மூலம் கட்டுப்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமும், செயல் விளக்கமும் அளித்தனா்.

நிகழ்வில் க. வினோத், கு. சச்சிதானந்தம், ர. சரவணன், மு.மனோஜ் குமாா், அ.ஸ்ரீகாந்த், பா. சஜின் ராஜினோ, ம.வசந்த் கிருஷ்ணா ரெட்டி, ச. பூா்ணசந்திர ரெட்டி உள்ளிட்ட மாணவா்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.