தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1.44 லட்சம் பறிமுதல்
பென்னாகரம் அருகே வாகனச் சோதனையில் மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 1,44,500-ஐ பறிமுதல் செய்தனா்.
பென்னாகரம் அருகே வாகனச் சோதனையில் மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 1,44,500-ஐ பறிமுதல் செய்தனா்.
பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி பகுதியில் வேளாண்மை துறை அலுவலா் மணிவண்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தருமபுரியில் இருந்து வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 1,44,500-ஐ முனியப்பன் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்தனா். பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனா்.