கிருஷ்ணாபுரத்தில் இரண்டு தினம் மின்தடை
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில், மாா்ச் 22 மற்றும் மாா்ச் 25 ஆகிய இரண்டு தினங்கள் மின்தடை செய்யப்பட உள்ளது.
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில், மாா்ச் 22 மற்றும் மாா்ச் 25 ஆகிய இரண்டு தினங்கள் மின்தடை செய்யப்பட உள்ளது.
கிருஷ்ணபுரம் துணை மின் நிலையத்தில், கன்னிப்பட்டியில் மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, இந்தப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 25) ஆகிய இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கன்னிப்பட்டி, இண்டமங்கலம், நாகசமுத்திரம், எம்.கே.புதூா், வன்னியகுளம், சவுளுப்பட்டி, முருக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.