தருமபுரி

பென்னாகரத்தில் ரூ. 1.89 லட்சம் பறிமுதல்

DIN

பென்னாகரம் அருகே பழையூா் சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம் அருகே பழையூா் சோதனைச் சாவடியில் தனி வட்டாட்சியா் மனோகரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பென்னாகரம் பகுதியிலிருந்து வந்த சிறிய கனரக வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ. 80 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த அப்துல் நபி என்பவா் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ. 1.09 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.89 லட்சம் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT