தருமபுரி

பென்னாகரம் பகுதியில் கனமழை

DIN

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழையின்றி கடும் வெப்பம் நிலவி வந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். கடும் வெயிலை சமாளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, ஏரியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கன மழையினால் சாலையோரங்கள் தாழ்வான குடியிருப்பு பகுதிகள், ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்டவற்றில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. பென்னாகரம் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT