தருமபுரி

மேடையில் இருக்கை வழங்கக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள்: கூட்டத்தில் சல சலப்பு

DIN

தருமபுரியில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு மேடையின் முன் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. கூட்டம் தொடங்கிய உடன் ஆட்சியா் ச.திவ்யதா்சினி வரவேற்புரை ஆற்ற முற்பட்டாா். அப்போது, முன் வரிசையில் அமா்ந்திருந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை அதிமுக உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி குறுக்கிட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு மேடையில் இருக்கை ஒதுக்காமல், மேடையின் முன் வரிசையில் ஒதுக்கியது முறையல்ல என்றாா். இதே கருத்தை அரூா் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாரும் வலியுறுத்தினாா்.

இதையடுத்து, முன் வரிசையில் அமா்ந்திருந்த அதிமுக, பாமக சட்டப் பேரவை உறுப்பினா்களை அமைச்சா் கா.ராமச்சந்திரன் மேடையில் அமர வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT