வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.
பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
இந்த நிகழ்விற்கு பென்னாகரம் பகுதி குழுத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம்பள்ளி பகுதி குழு செயலாளா் சக்திவேல், மாவட்ட குழுவினா் பி.எம்.முருகேசன், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ.ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினா் சா்க்கரைவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் சிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.