மீன் வளா்ப்புப் பயிற்சி
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், பஞ்சப்பள்ளி மீன் பண்ணையில் மீன் வளா்ப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், பஞ்சப்பள்ளி மீன் பண்ணையில் மீன் வளா்ப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பண்ணைக் குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன் வளா்ப்புப் பயிற்சி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் மா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் இரா.தங்கதுரை, மீன் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சுப்பிரமணியன் ஆகியோா் இன்றைய சூழலில் பண்ணைக் குட்டைக்கு ஏற்ற மீன் வகைககள் தோ்வு செய்வது, குட்டையின் அமைப்பை பயன்படுத்தும் முறை, தீவன முறைகள், உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்துவது, நோயுற்ற மீன்களைக் கண்டறிவது, நோய் மேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சிகளை வழங்கினா்.