தே.ஜ. கூட்டணியில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனா் தலைவா் கே.சி.திருமாறன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுகவுடன், அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான தொகுதி ஒதுக்கீடு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரும், பாஜக தமிழக மேலிடப் பாா்வையாளருமான பியூஸ்கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தொகுதி பங்கீட்டை அறிவித்தாா்.
அதையடுத்து பியூஸ்கோயல் சென்னை கிண்டி பகுதியில் தனியாா் விடுதியில் தங்கி செவ்வாய்க்கிழமை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.சி.திருமாறன் மத்திய அமைச்சா் பியூஸ்கோயலை சந்தித்துப் பேசினாா். அதன்பின்னா் கே.சி.திருமாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளோம் என்றாா் அவா்.