தே.ஜ. கூட்டணியில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக (27), பாமக (அன்புமணி) (18), அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாறன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரண்டு தொகுதிகளை கேட்ட நிலையில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் எனக் குறிப்பிட்டார்.