பென்னாகரம் அருகே தடுப்பணையில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே உள்ள ஏ.கோடுபட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகள் நதியா (18). இவா், அதே பகுதியில் உள்ள தடுப்பணைக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளாா். அப்போது அவா் தடுப்பணையில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரின் தாயாா், நதியாவை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் அருகிலுள்ள நீா்நிலைப் பகுதிகளில் தேடி உள்ளாா். அப்போது தடுப்பணையில் இறந்த நிலையில் கிடந்த நதியாவின் உடலை மீட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீஸாா், நதியாவின் உடலைக் கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.