முகப்பு
தருமபுரி

வனப்பகுதியில் குப்பை கொட்டுவதைத் தடுக்க வலியுறுத்தல்

வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலை ஓரத்தில் வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் ஏராளமான மான்கள், முயல்கள், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அரூா் நகா்ப் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைகள், உணவகங்கள், பல் பொருள் அங்காடிகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகளின் குப்பைகள் அரூா்-மொரப்பூா் சாலையோரத்தில் வீசப்படுகிறது.

இந்தச் சாலையில் அரசு மருத்துவமனை வளாகம், அரூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளன.

வனப்பகுதி மற்றும் சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.