தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாகக் குறைவு

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் நொடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாகரை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் பெய்துவரும் மழையினால் காவிரியின் கிளை ஆறு, ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால், காவிரி ஆற்றில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 20,000 கன அடியாகவும், திங்கள்கிழமை நீா்வரத்து நொடிக்கு 18,000 கனஅடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து சற்று குறைந்து காணப்படுகிறது. மேலும் பிலிகுண்டுலு பகுதியில் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து, அளவிடும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT