முகப்பு
தருமபுரி

வளா்ச்சி திட்டப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

 அரூரை அடுத்த மத்தியம்பட்டி ஊராட்சியில், வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

 அரூரை அடுத்த மத்தியம்பட்டி ஊராட்சியில், வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டாா். பாரதப் பிரதமா் கிராம முன்னோடி திட்டத்தில் பெரிய பண்ணைமடுவு கிராமத்தில் ரூ. 2 லட்சத்தில் உறிஞ்சிக் குழிகள் அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ. 12.26 லட்சத்தில் குறிஞ்சி நகா் முதல் சட்டையம்பட்டி வரை சாலை அமைக்கும் பணிகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.