ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூா் நந்தினி லே அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் மகன் ஜேம்ஸ் பவுல் (22). இவா் தனியாா் வங்கியில் டேட்டா ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா்.
தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளாா். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்து விட்டு , ஒகேனக்கல் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குடும்பத்துடன் குளித்தனா்.
அப்போது ஜேம்ஸ் பவுல் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டாா். குடும்பத்தினா் ஜேம்ஸ் பவுலை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது தொடா்பாக ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் கொடுத்தனா்.
அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினா் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஜேம்ஸ் பவுலை தேடிவந்த நிலையில், ஆலாம்பாடி காவிரி கரையோரத்தில் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.