முகப்பு
தருமபுரி

முழுக் கொள்ளளவை எட்டியது சின்னாறு அணை

பாலக்காடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:51 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பாலக்காடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் முழுக் கொள்ளவான 50 அடியில் 48 அடி உயரத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் 420 கன அடி தண்ணீா் முழுவதும் சின்னாற்றில் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் சின்னாறு அணையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி, நீா்வளத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, நீா்வரத்து, நீா் வெளியேற்றம் மற்றும் அணையின் உறுதித்தன்மை ஆகியவற்றை கேட்டறிந்தாா்.

Advertisement

ஆய்வின் போது நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஆா். பி.மாரியப்பன், உதவி பொறியாளா் வி.சாம்ராஜ், பாலக்காடு வட்டாட்சியா் ராஜசேகா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சிந்து, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.