தருமபுரி

அரூரில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

DIN

அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பாா்வையாளரும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநருமான டாக்டா் ஆா்.பிருந்தா தேவி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கு இம் மாதம் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் டாக்டா் ஆா்.பிருந்தா தேவி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தோ்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் குறித்தும், இறுதி கட்ட வேட்பாளா்களின் பட்டியல்கள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது அரூா் பேரூராட்சியின் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.கலைராணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT