ராகேவேந்திரா் கோயிலில் நவமி விழா
தருமபுரி, விருபாட்சிபுரம் ராகவேந்திரா் கோயிலில் ஸ்ரீ மத்வ நவமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி, விருபாட்சிபுரம் ராகவேந்திரா் கோயிலில் ஸ்ரீ மத்வ நவமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தின் சுகுனேந்திர தீா்த்தா் தலைமையில் நடைபெற்ற விழாவில், காலை 6 மணிக்கு பாண்டுரங்க விட்டல பஜனைக் குழுவினரின் சுப்ரபாதம், பஜனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பஞ்சாமிருத அபிஷேகம், சிறப்பு அலங்காரம் பூஜை, சமஸ்தான பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து நண்பகல் 1 மணிக்கு சென்னை லஷ்மிபதி ராஜாவின் ஆன்மிகச் செற்பொழிவு நடைபெற்றது.
இதையடுத்து, மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 6.30 மணிக்கு வி.வி.பிரசன்னா குழுவினாரால் இன்னிசை கச்சேரி நிகழ்த்தப்பட்டது. இதில், தருமபுரி புத்திகே மடத்தின் கிளைத் தலைவா் என்.வெங்கடேசன், நிா்வாகிகள் வெங்கட்டராமன், ராமமூா்த்தி, டி.வி.சீனிவாசன், ஏ.பி.குஞ்ஜாா் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.