பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்
தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்த பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் 5 அரசு பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், தொலைக்காட்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்த பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் 5 அரசு பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், தொலைக்காட்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 3 எல்இடி தொலைக்காட்சிகள், ஜருகு மேல்நிலைப் பள்ளிக்கு 3 தொலைக்காட்சிகள், வெள்ளக்கல் தொடக்கப் பள்ளிக்கு ஒரு தொலைக்காட்சி, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், சமத்துவபுரம் தொடக்கப் பள்ளிக்கு ஒரு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், தடங்கம் நடுநிலைப் பள்ளிக்கு ஒரு குடிநீா் சுத்தகரிப்பு இயந்திரம், தொலைக்காட்சி வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சுங்கச்சாவடி திட்ட தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக மேலாளா் ஜோஸ்வின் ஸ்மைல், இயக்க மேலாளா் அருண்குமாா், சாலை பாதுகாப்பு அலுவலா் ஞானசேகா், பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.