முகப்பு
தருமபுரி

பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி கிராம ஊராட்சி, பேரேரி புதூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகள் பொன்மணி (17). இவா், சித்தேரி அரசு மலைவாழ் பழங்குடியினா் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பள்ளி வளாகத்தில் மதிய உணவு சாப்பிடும்போது திடீரென மயங்கிய விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவா்கள் மாணவியை மீட்டு சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.