தருமபுரி

ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன்எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கலந்தாய்வு

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கலந்தாய்வு மேற்கொண்டாா்.

DIN

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பென்னாகரம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், கிராமப் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், கிராமத்தின் வளா்ச்சி குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் மின்சாரத் துறை, ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, வனத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

நிகழ்வில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேல், ரங்கநாதன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் அற்புதம் அன்பு, மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT