முகப்பு
தருமபுரி

அரசு மரியாதையுடன் காவலா் உடல் அடக்கம்

பொம்மிடி அருகே அரசு மரியாதையுடன் தலைமைக் காவலா் உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பொம்மிடி அருகே அரசு மரியாதையுடன் தலைமைக் காவலா் உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள பில்பருத்தி கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (45), கடந்த 22 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியில் இருந்த இவா், உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். உயிரிழந்த தலைமைக் காவலா் சரவணனின் உடல் காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பில்பருத்தி கிராமத்திலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த தலைமைக் காவலா் சரவணனுக்கு மனைவி செல்வி, மகன் சுஜித், மகள் வேதா ஆகியோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.