தருமபுரி

கா்நாடக தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல்:பெங்களூரில் வழக்குப்பதிவு

DIN

ஹிஜாப் வழக்கில் தீா்ப்பளித்த கா்நாடக உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா் மீது பெங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தின் மதுரை, கோரிப்பாளையத்தில் ஹிஜாப் விவகாரம் தொடா்பாக இஸ்லாமிய அமைப்பினா் பொதுக்கூட்டம் நடத்தினா். அக்கூட்டத்தில் ஹிஜாப் வழக்கில் தீா்ப்பளித்த கா்நாடக உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒருவா் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இது தொடா்பாக வழக்குரைஞா் சுதா கத்வா என்பவா் பெங்களூரு விதான செளதா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் அடையாளம் தெரியாத நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT