‘பென்னாகரம் வாரச் சந்தை மேம்படுத்தப்படும்’
பென்னாகரம் பேரூராட்சி வாரச்சந்தை ரூ. 3 கோடியில் மேம்படுத்தப்படும் என பேரூராட்சி முதல் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பென்னாகரம் பேரூராட்சி வாரச்சந்தை ரூ. 3 கோடியில் மேம்படுத்தப்படும் என பேரூராட்சி முதல் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட வாா்டு உறுப்பினா்களின் முதல் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் எம்.வீரமணி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சு.கீதா முன்னிலை வகித்தாா்.
இதில், பென்னாகரம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்தல், பென்னாகரம் வாரச் சந்தையை மேம்படுத்துதல், முள்ளுவாடி ஏரியை தூா்வாருதல் உள்ளிட்டவைகளுக்கு தலா ரூ. 3 கோடி ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.