தருமபுரி

வனப்பகுதியில் கழிவுகளை கொட்டியவருக்கு அபராதம் விதிப்பு

DIN

அரூா் அருகே வனப்பகுதியில் வாழை மரத்தின் கழிவுகளை கொட்டியவருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் - சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் காப்புக் காடு உள்ளது. இந்தக் காப்புக் காட்டில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இங்குள்ள காப்புக் காட்டில் அரூா் நகா் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதியில் இருந்து பயனற்ற நெகிழிப் பொருள்கள், குப்பைகளை கொட்டுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மொரப்பூா் வனச்சரகா் மு.ஆனந்தகுமாா் தலைமையில், வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு மினி சரக்கு வாகனத்தில் வாழை மரத்தின் கழிவுகளை எடுத்து வந்து காப்புக் காட்டில் கொட்டியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காப்புக் காட்டில் வாழை மரத்தின் கழிவுகளை கொட்டியதாக எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனி (59) என்பவருக்கு வனத்துறையினா் ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT