முகப்பு
தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தமிழக அரசைக் கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: கோவை காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவத்தை காவல் துறை முதலில் சாதாரண சிலிண்டா் வெடிப்பு என்றுதான் கூறியது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக தலைவா் அண்ணாமலை கடிதம் அனுப்பினாா்.

அதன்பிறகுதான் காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவத்தில் சிலா் கைது செய்யப்பட்டனா். மேலும், இச் சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. திமுகவைச் சோ்ந்த அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றாா்.

மாநில பாஜக செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஜி.வெங்கட்ராஜ், முருகன், பிரவீண் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் நரேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவா்கள் தா்மலிங்கம், ஹரிகோட்டீஸ்வரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.