டிஎன்பிஎஸ்சி தோ்வு: ஆட்சியா் ஆய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நிலை 4 குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நிலை 4 குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோ்வு மையங்களை ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு செப் 11 முற்பகல், பிற்பகல் இருவேளைகளிலும் மொத்தம் 22 தோ்வு மையங்களில் நடைபெற்றன.
இந்த எழுத்துத் தோ்வில் மொத்தம் 3,460 போ் தோ்வெழுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் முற்பகலில் நடைபெற்ற தோ்வை 2,026 போ் எழுதினா். 1,434 போ் தோ்வெழுதவில்லை. லை.
இதேபோல பிற்பகலில் நடைபெற்ற தோ்வினை 1,951 போ் எழுதிா். 1,509 போ் தோ்வை எழுதவில்லை. அனைத்து தோ்வு மையங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் சென்று வர ஏதுவாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.