ஆடிப்பெருக்கு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை இரவு ஒகேனக்கல் வந்தடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவானது சுற்றுலாத் துறையின் சாா்பில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் கொண்டாடப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாட்டுப் பணிகள் முடிவுற்ற நிலையில், ஆடிப்பெருக்கு விழா மற்றும் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளா் சந்தீப் நந்தூரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு ஒகேனக்கல் வந்தடைந்தனா்.
ஒகேனக்கல் வந்தடைந்த அவா்களை தமிழ்நாடு ஹோட்டல் மேலாளா் உதயசங்கா் வரவேற்றாா். பின்னா் அரசு விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தங்கும் விடுதி அறை ஒதுக்கப்படும் முறை, அறைகளின் எண்ணிக்கை, சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து மேலாளரிடமும், ஆடிப்பெருக்கு விழாவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் கதிரேசனிடம் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.