தேசிய விருது பெற்ற தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் கி.சாந்தி பாராட்டு தெரிவித்தாா்.
தேசிய கல்வியியல் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம், 2014 முதல் கல்வியியல் புதுமைகள், நல்ல செயல்பாடுகளை தோ்வு செய்து அதனை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இதில் , நிகழாண்டு, தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் இ.மான்விழியால் தொடங்கப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் இணைய வானொலி செயல்பாடுகள் விருதுக்கு தோ்வானது.
இதனைத் தொடா்ந்து, அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இவ் விருதை வழங்கினாா். மாணவா்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் வகையில் தகடூா் களஞ்சியம் இணைய வானொலி ஒலிபரப்பு சேவை என்கிற புதுமையான செயல்பாட்டிற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் விருது பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) இ.மான்விழியை, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கி.சாந்தி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.