தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
தருமபுரியிலிருந்து தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தருமபுரியிலிருந்து தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, நிவாரணப் பொருள்களை பேருந்து மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, வெள்ள நிவாரணப் பொருள்களை பேருந்து மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தாா் (படம்). இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவா் ப.பாஸ்கா், துணைத் தலைவா் பா.சங்கீத்குமாா், வட்டாட்சியா் ராஜராஜன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.