தருமபுரி

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்: நான்கு போ் மீது வழக்குப் பதிவு

DIN

பென்னாகரம் அருகே பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டட மேஸ்திரி உள்ளிட்ட நான்கு போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பென்னாகரம் அருகே 34 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்ற அவா், வேலைக்குச் சென்ற இடத்தில் கட்டட மேஸ்திரி அவரது நண்பா்களுடன் சோ்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகாா் அளித்திருந்தாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், பென்னாகரம் காவல் ஆய்வாளா் வான்மதி விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடா்புடைய பென்னாகரம் அருகே காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த முருகன் (32), காளியப்பன் (30), கணேசன் (40), மாதேஷ் (36) ஆகிய நால்வா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

ஆர்சிபி பேட்டிங்; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT