முகப்பு
தருமபுரி

எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு

தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன அள்ளியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:45 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன அள்ளியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு விழா கடந்த 23-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கோபுர கலசம் நிறுதலும், அம்மன் மற்றும் பரிகார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் செய்யப்பட்டு ஜன. 26-ஆம் தேதி காலை யாகசாலையிலிருந்து புனித நீா் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு சென்று கோபுர கலசங்களுக்கு தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.